Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவகங்கையில் அரங்கேறிய பயங்கர சம்பவம்

ஜுலை 13, 2019 05:35

சிவகங்கை: சிவகங்கை அருகே தம்பியை கொலை செய்த நபரை வெட்டிக் கொன்றுவிட்டு, அவரது ரத்தத்தை தம்பி இறந்த இடத்தில் அண்ணன் தெளித்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகேயுள்ள மாத்தூரை சேர்ந்த அருண்பிரசாந்த் என்ற இளைஞரும், சிவமூர்த்தி என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும்  மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கடந்த மார்ச் மாதம் கண்மாய் பகுதியில் சிவமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் அருண்பிரசாந்தை வெட்டி படுகொலை செய்தார். 

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இதனை நோட்டமிட்ட அருண்பிரசாந்தின் அண்ணன் ஊர்காவலன், கடந்த 9ம் தேதி தனியாக தோப்பிற்கு சென்ற சிவமூர்த்தியை கும்பலுடன் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இதனிடையே கொலை செய்தது தொடர்பாக ஊர்காவலன் தனது நண்பர்களுக்கு வாட்சப் குரூப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியது தற்போது வெளியாகியுள்ளது. 

இதில் சிவமூர்த்தியை கொலை செய்துவிட்டு துணியால் துடைத்து கொண்டு, அதனை தனது தம்பி இறந்த கண்மாயில் வீசி ரத்தத்தை தெளித்ததாக கூறியுள்ளார். இறந்த இடத்தில்  ரத்தத்தை தெளித்ததால் தான் தனது தம்பியின் ஆத்மா சாந்தமாகும் என்றும் வாட்ஸ் ஆப் ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார். 

தம்பி இறந்த இடத்தில் ரத்தத்தை தெளித்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

தலைப்புச்செய்திகள்